வடக்கு கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டம், மாநிலத்தின் “துர் கிண்ணம்” என்று அழைக்கப்படும் தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 330,000 ஹெக்டர் நிலம் துவரை அல்லது செம் துவரம் பருப்பு சாகுபடி மற்றும் உற்பத்தியின் கீழ் வைக்கப்பட்டாலும், இந்த பயிரின் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முதன்மைக் காரணம், பாரம்பாிய முறையில் பயிரிடப்படுகிறது. இது பயிர் வறட்சி, ஒழுங்கற்ற மழை மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு ஆளாகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் தங்கள் பயிரில் முதலீடு செய்ததற்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை.
துவரை பயிரிடும் பாரம்பாிய முறையானது “டிப்ளிங்” எனப்படும் ஒரு செயல்முறையை உள்ளடக்கியது. இதில் நிலத்தை உழும் போது விதைகள் நேர்கோட்டில் விதைக்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, விதைக்கப்பட்ட விதைகளுக்கு இடையிலான இடைவெளியில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. மேலும் உரங்களும் கண்மூடித்தனமாக தௌிக்கப்படுகின்றன. இவற்றின் காரணமாக, மழையில் ஏற்படும் தாமதம் பயிரின் விளைச்சலை நேரடியாக பாதிக்கிறது. அதேநேரத்தில் பூச்சி தாக்குதல் அபாயத்தையும் விளைவிக்கிறது.
இந்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு,பயிரின் விளைச்சலை கணிசமாக மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையின் கீழ், விவசாயிகள் முதலில் தனி நாற்றங்காலை அமைத்து, துவரைக் கன்நாற்றுகளை வளர்த்து, பின்னர் அவை வயலுக்கு மாற்றப்படுகின்றன. அறிவியல் ரீதியாக அளவிடப்பட்ட முறையில் உதாரணமாக விவசாயிகள் மரக்கன்றுகளை நடும்போது ஒவ்வொரு மரக்கன்றுக்கும் இடையே 5 அடி இடைவெளியும் இருக்க வேண்டும். இந்த இடைவெளியானது சோளம் அல்லது சாமந்தியை ஊடுபயிராக விதைக்க அனுமதிக்கிறது.
விருத்தி வாழ்வாதார வள மையம் – வேளாண் அறிவியல் மையம் மற்றும் விவசாயத் வேளாண்மைத் துறை, கர்நாடகா மற்றும் சிறு விவசாயிகள் விவசாய வணிகக் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஏ.சி) நிதி ஆதரவுடன் குல்பர்கா விவசாயிகளுக்கு இந்த புதிய துவரை பயறு நடவு முறையை செய்து காட்டியது. இந்த புதிய தொழில்நுட்பம் விவசாயகளுக்கு பொிதும் பயனளித்துள்ளது. மேலும் அதன் அறிமுகம் உள்ளீடு செலவைக் குறைக்கவும், பயிர் விளைச்சலை அதிகாிக்கவும் மற்றும் தாமதமான மழையினால் ஏற்படும் பயிர் இழப்பு அபாயத்தைத் தணிக்கவும் உதவியது.
குல்பர்காவைச் சேர்ந்த முற்போக்கு விவசாயியான மாலிகார்ஜூன் பாட்டீல் இந்த புதிய தொழில்நுட்பத்தின் பயனாளி என்பது ஒரு உதாரணம். ஆலந்து தாலுக்கா, கிண்ணி சுல்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியை விருத்தி களப் பணியாளர்கள் அணுகி, அவருக்கு மரக்கன்று முறையை அறிமுகப்படுத்தினர். ஆரம்பத்தில், தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் துவரை சாகுபடி செய்யும் இந்த நுட்பத்தை அவர் முயற்சித்தார். இந்தச் சோதனையின் முதலீட்டுக் காரணியைப் பற்றி பாட்டீல் கூறுகிறார். “பாரம்பாிய முறையில், நான் ஒரு பருவத்தில் இடுபொருட்களின் மீது ஏக்கருக்கு ரூ. 10,420 கிடைக்கும். அதில் எனக்கு 4 குவிண்டால் மகசூல் கிடைக்கும். இதை விற்றதும் ஒரு குவிண்டாலும் ரூ.4000. நான் மொத்தம் ரூ. 16000 தயாரிப்பிலிருந்தும், நான் பச்சைபயிரை ஊடுபயிராகவும் பயிரிட்டேன். இதன் மூலம் எனக்கு ரூ. 3000 (மேலும்) 1 ஏக்கர் நிலத்தின் மூலம் எனது நிகர லாபம் ரூ. 8760. புதிய முறையில் நாற்றங்கால்களை அமைப்பதற்கு (கன்றுகளை வளர்க்க) கூடுதல் செலவு இருந்தாலும், மகசூல் அதிகாிப்பு மற்றும் விதைகள் மற்றும் ரசாயன தௌிப்புகளின் விலை குறைவதால் அது முற்றிலும் ஈடுசெய்யப்படுகிறது. இந்த விஷயத்தை விளக்குவதற்கு, பாட்டீலைப் போன்ற மற்றொரு விவசாயி, புதிய தொழில்நுட்பத்தின் வெற்றிகரமான அனுபவத்தைப் பற்றி பேசுகிறார். அவர் கூறுகிறார், “மாற்று முறையில் உள்ளீடு செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.10,260 . நாங்கள் பயன்படுத்திய பாரம்பாிய முறைகளிலிருந்து வேறுபட்டதல்ல.
இருப்பினும், மகசூலில் பொிய வித்தியாசம் இருந்தது. புதிய முறையில் 7 குவிண்டால் துவரை விளைவித்து, அதன் மூலம் ரூ. 28000. மேலும் கூடுதலாக மக்காச்சோள ஊடுபயிரில் வருமானம் ரூ. 4000. நான் நிகர லாபமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 21240 ரூபாய் ஈட்ட முடிந்தது. இது பாரம்பாிய முறையில் கிடைக்கும் வருமானத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தப் புதிய முறையின் நம்பகத்தன்மை மல்லிகார்ஜூன் மற்றும் பல விவசாயிகளின் வெற்றிக்கதைகளில் பிரதிபலிக்கிறது. விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் உறுப்பினர்கள் இந்த நடைமுறைகளை ஏற்றுக்கொண்டவர்கள். பயிர் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் சிறிய மழை பெய்தாலும், நாற்றங்கால் வளர்ப்புச் சூழலில் செடிகள் துளிர்க்கத் தொடங்குவதால், வறட்சியான காலநிலையைத் தாங்கும் திறன் கொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இதனால், மழை இல்லாத மாதங்களில் விவசாயிகள் நஷ்டம் ஏற்படாமல் காத்திருக்கின்றனர். மேலும், பாரம்பாிய முறையுடன் ஒப்பிடும்போது அதிக கிளைகளையும், பூக்களையும் பெற முடிகிறது. இந்த புதிய தொழிலநுட்பத்தின் தாக்கம், அடுத்த ஆண்டுக்குள் உற்பத்தி பரப்பை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளனர்.
வறட்சி மற்றும் ஒழுங்கற்ற மழையினால் பாதிக்கப்படக்கூடிய துவரைப் பயிர் வளரும் மற்ற பகுதிகளிலும் இந்த முயற்சி பின்பற்றப்படுகிறது. குல்பர்கா மாவட்டத்தில் இம்முயற்சியின் அளவை அதிகாிப்பது. இந்த செயல்முறையில் விவசாயிகளுக்கு முறையாகப் பயிற்சி அளித்ததையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காண்பிப்பதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.
Location/Address of FPO: Krishikabandhu Farmer Producer Company Ltd, Village: Kinnisultan, Taluka Aland, District: Gulbarga, Karnataka. Phone: Baburao Patil- 09740621115. Contact Details of RI: Vrutti Livelihood Resource Centre, No. 19, 1st Main, 1st Cross, RMV 2nd Stage, Ashwathnagar, Bengaluru, Karnataka – 560094. Phone: 080-23419616, 23517241. Email: bala@vrutti.org I Website: www.vrutti.org. Source: This article was originally published in “Krishi Sutra 2 Success stories of FARMER PRODUCER ORGANISATIONS”.
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 4



